மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு பூட்டு போடப்பட்டது.
கர்நாடகா மாநிலம், மங்களூரில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆட்டோ டிரைவரும், பயணியாக வந்த ஷாரிக் (வயது 22) என்பவரும் படுகாயமடைந்தனர்.
மங்களூர் சம்பவத்துக்கும், கோவை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்படுகிறது. இது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது ஷாரித் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் (MMV) என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் அந்த விடுதிக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விடுதி உரிமையாளர் காமராஜ் என்பவரை விடுதியை பூட்டி விட்டு விசாரணைக்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.