கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் தடாகம் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால், கனிம வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிற்கிணங்க சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட செங்கல் சூளைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட 21 செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பேரூர் வட்டாட்சியர் காந்திமதி தலைமையில் பேரூர் காவல்துறையின் பாதுகாப்புடன் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் நாட்களில் அனைத்து தாலுகாவிலும் நீதிமன்றம் உத்தரவு வழங்கிய அனைத்து சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கும் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.