கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், 5 இடங்களில் நேற்றிரவு சோதனை நிறைவடைந்தது.
வரி ஏய்ப்பு தொடர்பாக கோவையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் மற்றும் தொழில் அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டாம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர். மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.
ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம், அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 5 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.குறிப்பாக கோவை பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராமநாதன் அலுவலகம், வீடு மற்றும் அவரது மகன் சொர்ண கார்த்திக் இல்லம், பணியாளர்கள் தங்கும் அறை ஆகிய 4 இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
இதில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் தொழிலதிபர் ராமநாதன் வீட்டில் இருந்து கட்டுகட்டாக பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறப்படுகின்றது. காளப்பட்டியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் மட்டும் சோதனை தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.