கோவை மத்திய சிறை வளாகத்தில் தூக்கில் தொங்கிய பிணம்… போலீசார் விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 6:25 pm
Quick Share

கோவை : கோவை மத்திய சிறை துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறைத்துறைக்கு சொந்தமான மைதானம் தற்போது காலியாக உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் இருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் மரத்தில் தொங்கிய இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுகேஷ் (25). என்பதும், வேலை தேடி கோவை வந்ததும் தெரியவந்தது.

இளைஞர் ஒருவர் கோவை மாநகரின் மையப்பகுதியாக செயல்படக் கூடிய சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 317

0

0