கோவை : கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணி புதூர் அருகே உள்ள கேரளா கொச்சின் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றின் அருகில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கேரள பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரு வடமாநில நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் வைத்திருந்து தோல் பையில் பச்சை நிற மிட்டாய் வடிவிலான கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தில்சானத் சதா, ராஜ்குமார் என்பதும் தெரிய வந்தது.
இருவரும் பீகார் பகுதியில் இருந்து சாக்லேட்டுகளை ரயில் மூலம் கடத்தி வந்து இப்பகுதியில் உள்ள வடமாநில நபர்களுக்கும், கேரளா செல்லும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் பதுக்கி வைத்திருந்த நான்கு அரை கிலோ பச்சை நிற சாக்லேட் வடிவிலான கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.