கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை கோவை வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் உள்ள கழிவறை அருகே பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வழியாக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தொடர்ந்து இதுபோன்று கஞ்சா கடத்தப்படுவதும், கடத்தல் காரர்கள் கஞ்சா பொட்டலங்களை பொது இடத்தில் வைத்துவிட்டு, வேறு இடத்தில் அமர்ந்து கொள்வதால் அதனை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்வதில் சிக்கல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.