ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி (32). ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 12ம் தேதி ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர் . அந்த கும்பல் வந்த வேகத்தில் சத்திய பாண்டியை சுற்றி வளைத்து கத்தியால் வெட்டினர் .
அப்போது அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடி அங்குள்ள வீட்டுக்குள் புகுந்தார். அப்போதும் அந்த கும்பல் சத்திய பாண்டியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில் அரக்கோணம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சாய்ரா பானு முன்னிலையில், கோயம்புத்தூர் தீதி பாளையத்தைச் சேர்ந்த காஜா உசேன்(23), செல்வபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23 ), அதே பகுதியைச் சேர்ந்த சல்பான்கான் (22), நாகர்கோவில் கிருஷ்ணர் கோயிலைச் சேர்ந்த ஆல்வின் (37) ஆகிய 4 பேர் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் கோர்ட் காலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இச்சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.