கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிறப்பாக பணியாற்றியவர். 2023 ஆம் ஆண்டில், கிராந்திகுமாருக்கு பதிலாக அவர் அங்கு ஆணையர் பொறுப்பேற்றார்.
இதையும் படியுங்க: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. திரண்டு வந்த பக்தர்கள் : களைகட்டிய கோவை!
தற்போது, அதே பாணியில் கோவையிலும் கிராந்திகுமாருக்கு பதிலாக புதிய ஆட்சியராக பொறுப்பேற்கிறார். பவன்குமாரின் நியமனம், கோவை மாவட்ட நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது முந்தைய பணிகளில், நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை வெளிப்பட்டதால், கோவையிலும் அவர் தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.