கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிறப்பாக பணியாற்றியவர். 2023 ஆம் ஆண்டில், கிராந்திகுமாருக்கு பதிலாக அவர் அங்கு ஆணையர் பொறுப்பேற்றார்.
இதையும் படியுங்க: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. திரண்டு வந்த பக்தர்கள் : களைகட்டிய கோவை!
தற்போது, அதே பாணியில் கோவையிலும் கிராந்திகுமாருக்கு பதிலாக புதிய ஆட்சியராக பொறுப்பேற்கிறார். பவன்குமாரின் நியமனம், கோவை மாவட்ட நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது முந்தைய பணிகளில், நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை வெளிப்பட்டதால், கோவையிலும் அவர் தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.