தமிழகம்

வீட்டு பெண்களுக்கே துரோகம்.. எப்படி மனசு வருது? பிரபல சூப்பர் மார்கெட் உரிமையாளரின் மகன் கைது!

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் அவரது மகனான அஜய் கண்ணன் என்பவர் சமூக ஊடகங்களில் இளம் பெண்களை நட்பாக பழகி அவர்களது புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி வரும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இதன் இடையே கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த அஜய் கண்ணனின் நெருங்கிய உறவினர் ஒருவர் அஜய் கண்ணனை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த அஜய் கண்ணன் அவர்களது செல்போன் எண்ணையும் தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு சில தளங்களில் பரப்பி உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்த எண்களில் அழைத்து பேசவே மனம் உடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் அஜய் கண்ணனை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அஜய் கண்ணன் இதே போன்று சென்னையில் உறவினர் முறை பெண்களை தவறாக சித்தரித்து காவல் துறையில் சிக்கியதும், பல இடங்களில் இளம் பெண்களை குறி வைத்து அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.