கோவை : பொறுப்பாளர்களுக்கு கவுன்சிலர் சீட் ஒதுக்காமல் மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 வது வார்டில் திமுக பொறுப்பாளர்களுக்கு சீட்டு ஒதுக்காமல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 84 வது வார்டு கவுன்சிலர் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இன்று கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளை கண்டித்து அப்பகுதி திமுகவினர் பைபாஸ் சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது திமுகவினருக்கு இந்த வார்டில் சீட்டு ஒதுக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர். உக்கடம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கேட்கும் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்குவதாக கோவையில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.