கோவை ; ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களை விட இந்த படம் மோசம் இல்லை என்று கோவையில் தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ப்ரூக் பாண்டு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான ப்ரூக் ஃபீல்டில் திரையிடப்பட்டது. இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று ப்ரூக் ஃபீல்டில் உள்ள திரையரங்கில் ஒரு காட்சி மட்டும் திரையிடப்பட்டது. இதில் 52 பேர் மட்டுமே முன்பதிவு செய்து படத்தை பார்த்தனர்.
இந்த நிலையில், படத்தைப் பார்த்து வெளியே வந்தவர்கள் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுந்தர்ராஜன் கூறும்போது ;- இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்துவை முஸ்லிமாக கன்வெர்ட் பண்ணுகிறார்கள். இந்தப் படத்தில் நெகட்டிவ் அப்ரோச் ஒன்றும் இல்லை. கல்லூரி பெண்களை லவ் என்ற பெயரில் மயக்குகின்றனர்.
இதை வைத்து பயன்படுத்துகின்றனர். இதுதான் கதை. இந்தக் கதையில் வருவது எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் பொய் என்று நமக்கு தெரியாது. படம் நல்ல படம். இதை விட மோசமான படம் எல்லாம் வந்துள்ளது.இந்த படம் பெரிய தவறில்லை. ஓடிடியில் இதைவிட மோசமான படங்கள் வருகிறது, என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.