எட்டு பேர் அமரக்கூடிய மோட்டார் படகின் சேவை விரைவில் கோவை உக்கடம் பெரிய குளத்தில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம், பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தது.
இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்த வெளி அரங்கம் விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், படகு துறை மிதுவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ. 62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வ சிந்தாமணி குளம் ரூபாய் 31.47 கோடி மதிப்பீட்டிலும் வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூபாய் 24.31 கோடி மதிப்பீட்டில் புறனமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ. 67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூபாய் 31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டத்தின் மட்டுமே இருந்தது. நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி விரைவில் துவங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரியகுளத்தில் 4 இருக்கையில் கொண்ட இரண்டு படகுகள். இரு இருக்கை கொண்ட 1 படகு, 8 இருக்கை கொண்ட மோட்டார் போட் ஆகியவற்றடன் படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரத்தில் வரும். இதில் மோட்டார் போட் தற்போது தயார் நிலையில் உள்ளது,” என்றார்.
படகு சவாரி செய்ய எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் கூறுகையில், “கோவை மக்களுக்கு வஉசி உயிரியல் பூங்கா ஒன்றே பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. ஆனால் அதில் தற்போது மக்களுக்கு அனுமதி இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட மூலம் குளங்கள் அழகுபடுத்தப்பட்டன. அதில், படகு சவாரி அறிவிப்பு வெளியாகி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் திட்டத்தை துவங்க வேண்டும். குறிப்பாக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் படகு சவாரி இருக்க வேண்டும்,” என்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.