கோவை : தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்து நாடகமாடியவர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பரவைசராக பணியாற்றி வருகிறார். இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக மாநில செயற்குழு உறப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பாஜக தலைவர் உமாசங்கர் ஆகியோரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இவர்கள் இருவரும் விஸ்வநாதனின் நடவடிக்கை சரியில்லாதமையால் பாஜக வில் இணைக்காமல் இருந்துள்ளனர்..இதுதொடர்பாக விஸ்வநாதன் தொடர்ந்து இவர்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை இரவு விஸ்வநாதன் தனது வீட்டில் இவர் மீது இவரே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துள்ளார். அதன்பின் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளான சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் நடத்திய விசாரணையில் உமாசங்கர், சதீஷ்குமார் ஆகியோர் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக அவர்களை கொலை முயற்சி வழக்கில் சிக்க வைத்து பழிவாங்கும் நோக்கில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து கொண்டு அதனை பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. காவல்துறையினரின் விசாரணையில் இதனை விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை மேட்டுப்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.