கோவை : தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்து நாடகமாடியவர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பரவைசராக பணியாற்றி வருகிறார். இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக மாநில செயற்குழு உறப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பாஜக தலைவர் உமாசங்கர் ஆகியோரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இவர்கள் இருவரும் விஸ்வநாதனின் நடவடிக்கை சரியில்லாதமையால் பாஜக வில் இணைக்காமல் இருந்துள்ளனர்..இதுதொடர்பாக விஸ்வநாதன் தொடர்ந்து இவர்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை இரவு விஸ்வநாதன் தனது வீட்டில் இவர் மீது இவரே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துள்ளார். அதன்பின் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளான சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் நடத்திய விசாரணையில் உமாசங்கர், சதீஷ்குமார் ஆகியோர் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக அவர்களை கொலை முயற்சி வழக்கில் சிக்க வைத்து பழிவாங்கும் நோக்கில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து கொண்டு அதனை பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. காவல்துறையினரின் விசாரணையில் இதனை விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை மேட்டுப்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.