கோவை : தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்த மூதாட்டியை கோவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் நேற்று திருச்சி சாலை மேம்பாலம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மூதாட்டி ஒருவர் அசைவின்றி படுத்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீதர் மூதாட்டி அருகே சென்று அவரை எழுப்பினார். ஆனால். மூதாட்டி எழவில்லை.
அவரது அருகில் பேட்டரிகளுக்கு ஊற்றும் டிஸ்டில்டு தண்ணீர் இருந்தது. அப்போது, மூதாட்டி தண்ணீர் என்று நினைத்து பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்து மயக்க நிலையில் படுத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, தண்ணீர் வாங்கி வந்த ஸ்ரீதர், மூதாட்டிக்கு கொடுத்து அவரை எழுப்பி முதலுதவி அளித்தர். தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய போஸ்காரர் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.