கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் 18 பேருக்கு மத்திய அரசு பதக்கம் அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் அதிகாரிகள் பதக்கங்களை பெற உள்ளனர்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் மத்திய அரசின் பதக்கம் பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 662 அதிகாரிகள் இந்த பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 18 அதிகாரிகள் மத்திய அரசின் பதக்கத்தை பெற உள்ளனர். இவர்களில் ஏ.டி.ஜி.பி.வெங்கடராமன், சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோர் ஜனாதிபதி பதக்கம் பெறுகின்றனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து 4 காவல் அதிகாரிகள் இந்த பதக்கத்தை பெற உள்ளனர். இதில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வரும் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வரும் பிரதீப் குமார், கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன், கோவை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் முருகவேல் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.