கோவை : காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
இரண்டாம் நிலை காவலர் அஷ்ரப், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீவா என்பவரை ஆர்எஸ் புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜீவா காவலரை தள்ளிவிட்டு ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார்.
தொடர்ந்து, ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் பொழுது தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க சென்ற காவலரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கினார். பின்தொடர்ந்து வந்த ஆர்எஸ் புரம் போலீசார் மயங்கி விழுந்த காவலரை தண்ணீர் தெளித்து எழுப்பினர். தொடர்ந்து தப்பித்துச் செல்ல முயன்ற குற்றவாளி ஜீவாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று வந்துள்ளனர்.
கைதி தப்பி ஓடிவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது. காவலர் நலமுடன் உள்ளதாக ஆர் எஸ் புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.