கோவையில் ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங்கில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வருகிறது பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. தமிழக அளவில் அதிகளவில் நன்கொடை பெறும் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு பெரும் வசதி படைத்தவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் வாரிசுகளே பெரும்பாலும் பயின்று வருகின்றனர்.
இப்படியிருக்கையில், இந்தக் கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டு, அவருக்கு மொட்டை அடித்து ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களான மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்புள்ளிகளின் வாரிசு பயின்று வரும் இதுபோன்ற கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.