கோவை : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவைமாணவன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
துடியலூர் அடுத்த சுப்பிரமணியன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ், ரோகித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார்.
ஆனால் உயரம் பற்றாக்குறையால் ராணுவத்தில் தேர்வாகவில்லை. இதனால், உக்ரைன் நாட்டில் விமானவியல் படித்து வந்தார். இதனிடையே உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூழ்ந்தது.
உக்ரைனிலுள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நிகேஷ் உக்ரைன் துணை ராணுவ படையில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று வருகிறார்.
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த சாய் நிகேஷ் இந்தத் தகவலை ஒன்றிய உளவுத்துறை மற்றும் தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து அவரது பெற்றோர் ரவிச்சந்திரன், ஜான்சி லட்சுமி கூறுகையில், “நாங்கள் சாய்நிகேஷை தொடர்பு கொண்டு பேசியபோது, ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டதாகவும், போர் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் தொடர்ந்து பேச இயலாது என்றும் கூறியதாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் சாய்நிகேஷின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில் “அண்மையில் சாய்நிகேஷை தொடர்புகொண்டு பேசினேன். அவர் தாய் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொண்டு பொறுமை காக்குமாறும். அவரை நாடு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றார்
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.