கோவை வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததை தட்டி கேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 10 மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த எஸ்.எஸ்.குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் விற்பனையை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து உருட்டுக்கட்டையால் அவர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுரேஷ்குமார் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே டாஸ்மாக் பாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதை தட்டி கேட்ட நபரை தாக்கிய சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.