கோவை: கோவையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் சதீஷ் கூறியதாவது :- அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் டாஸ்மாக் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து டாஸ்மாக் மதுக்கடையை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிவன் கோயிலும் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது.
முன்னதாக சின்னியம்பாளையம் ஆரம்பப் பள்ளிக்கு முன்பு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் பலத்த எதிர்ப்பால் மூடப்பட்டது. இப்போது அதே கடை கோவிலுக்கு எதிரே வருவது வேதனை அளிக்கிறது. எனவே இதனை கைவிட வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களை முன்னெடுப்போம், இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.