கோவை : கோல்டுவின்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுயம்பு தம்புரான் கோவில் சுற்று சுவரை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் அகற்றியதற்கு, பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பினர் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோவில் அமைந்துள்து. இந்த கோவிலை சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மாநாகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, இன்று காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநாகராட்சி அதிகாரிகள் சுற்றுசுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுசுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது, அங்கு திரண்டு இருந்த பெண்கள் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி கோவில் சுவரை இடிக்க கண்ணீர் மல்க எதிர்ப்பை தெரிவித்தனர். பா.ஜ.க., இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.