Categories: தமிழகம்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல்: கோவை TO இலங்கை விமான சேவை ஒத்திவைப்பு..!!

கோவை இலங்கை இடையே நடப்பு மாதம் துவங்க இருந்த விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தொற்று குறைந்த நிலையில் கோவையில் இருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டது. அதேபோல், இலங்கைக்கும் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது,

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இருந்தாலும் இலங்கையில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கோவை – இலங்கை இடையே இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டுப் ஏப்ரல் மாதம் துவங்கப்படுவதாக இருந்த விமான சேவை, அக்டோபார் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் அங்கு நிலவும் சூழலை பொறுத்தே மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், கோவையில் இருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.