கோவையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணியளவில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்காமல் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் ஆறு போல் ஓடியது. குறிப்பாக மாநகரப் பகுதிகளான காந்திபுரம்,ரயில்நிலையம், உக்கடம் ,பீளமேடு, ராமநாதபுரம், சிட்ரா, காளப்பட்டி ,சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான வடவள்ளி, தடாகம், கணுவாய், சோமையனூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கிதால் ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் .குறிப்பாக கோவை- ஆனைகட்டி சாலையில் உள்ள தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை காரணமாக சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
This website uses cookies.