கோவை உக்கடம் மேம்பால பணிக்காக கடைகளை இடிக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சுமார் 2.4 கி.மீ தூரத்துக்கு மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு திரும்பும் சாலையில் இடப்புறத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது, கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் அப்பகுதியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உக்கடம் ஆத்துப்பாலம் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.