கோவை – மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் காட்டு யானை பாகுபலி உலா வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து ‘பாகுபலி’ என மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, விவசாய விளைநிலங்களிலும், வனச்சாலைகளிலும் நடமாடி வருகிறது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி, மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஓடந்துரை பகுதியில் நடமாடியது.
சாலையின் ஓரத்தில் வெகுநேரமாகியும் காட்டு யானை பாகுபலி வனத்தினுள் செல்லாமல் நின்று கொண்டிருந்த நிலையில், வாகன ஓட்டிகளோ, அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அதிக அளவில் சென்றுகொண்டே இருந்தன. இருப்பினும், காட்டு யானை பாகுபலியோ, யாரையும் அச்சுறுத்தாமல் அதன் போக்கில் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டே இருந்தது.
ஒருகட்டத்தில், சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல அந்த போக்குவரத்து நெரிசலில் யானை பாகுபலி ஊர்ந்து சென்று சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.