கோவை ; பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. டீச்சர் ட்ரைனிங் முடித்துள்ள இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்துமீறி பேசுவதும், வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான காயத்ரி, நிறுவன உரிமையாளரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி உரிமையாளர் காயத்ரியை அலுவலகத்தில் வைத்து அடிக்க முற்பட்டுள்ளார். ஐந்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.
இவரின் நடவடிக்கை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் காயத்ரி பீளமேடு காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் மனுவை எழுதி கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.