கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கப் பெற்ற, தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இதனால், பணம் கிடைக்கப்பெற்ற பெண்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
அதேவேளையில், பெரும்பாலான தகுதியுள்ள பெண்களுக்கு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, மீதமுள்ளவர்களுக்கு இன்று செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமை தொகையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை வெள்ளலூர், செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.