லண்டனில் கொலை செய்யப்பட்ட கோவை இளைஞர்… சடலத்தை அனுப்ப தாமதம் : பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!
கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1.5 ஆண்டுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த பிப்14 ஆம் தேதி தான் பணியாற்றும் ஹோட்டலில் இருந்து சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மீது மோதி விட்டு அவரை கொடூரமாக தாக்கிச் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் போலீஸார் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா எடுத்து வர தந்தை பட்டாபிராமன் சென்னையில் உள்ள அயலக நலத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் விசாரனைக்கு பின் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெற்றோர் கூறும் போது கடந்த 14ல், மகன் விக்னேஸ் விபத்தில் இருந்ததாக தகவல் கூறினார்கள், இரண்டு நாட்கள் கழித்து கொலை செய்துவிட்டதாக கூறினார்கள். கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு எதிரிகள் இல்லை.
மகன் இறந்து 10 நாட்கள் ஆகியும் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இறந்த மகனின் இறுதி மரியாதையை முறைப்படி செய்ய வேண்டும். தமிழக அரசும், தமிழக முதல்வர் தலையிட்டு மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.