கோவை: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஏத்தகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு இவரது மகன் பாரதிராஜா (25).இவர் தனது அண்ணன்கள் இருவருடன் சேர்ந்து. கோவை கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
ஆன்லைன் ஆப் மூலம் 12 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில், கடன் தொகையை சரியாக செலுத்தாத காரணத்தினால், ஆன்லைன் ஆப் கடன் நிறுவனத்திலிருந்து கடன் தொகையை வசூலிக்க இவரிடம் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்தலையில், பாரதிராஜா கடன் தொகை வசூலிக்கும் நிறுவனம் கொடுத்த டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் பாரதி ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.