கோவை ; இருட்டில் தன்னை தாக்க வந்த காட்டு யானையிடம் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை, துடியலூரை அடுத்த வரப்பாளையம், பொண்ணூத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. கேரளா ஒட்டியுள்ள வனப் பகுதியில் நாள்தோறும் தண்ணீர், உணவு தேடி வரும் வன விலங்குகள், யானைகள் ஊருக்குள் வளர்வது வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வரப்பாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. யானைகள் ஊருக்குள் புகுந்ததை கேள்விப்பட்ட விவசாயி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி தனது தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டு உள்ளதால் அதனை பாதுகாக்க மின்வெளி அமைக்கப்பட்டு இருந்த நிலையில், அது செயல்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வீட்டின் முன்பு வந்து பார்த்துக் கொண்டு உள்ளார்.
அப்பொழுது அவர் எதிர்பாராத போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை ராமசாமியை தாக்க வந்துள்ளது. இதனால், நிலைகுலைந்த ராமசாமி அந்த யானையிடம் இருந்து தப்பி ஓடி வந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பட்டாசு வெடித்து அந்த யானையை விரட்டி உள்ளனர்.
யானையிடம் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.