ஒசூர் அருகே வட்டார கல்வி அலுவலகத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் மொத்தம் 158 அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 650க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு மட்டும் கழிவறை உள்ளது. அங்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் பயன்பாட்டிற்கு கழிவறை இல்லாததால் கழிவறை தேவை எனக்கூறி 158 அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளிடமும் தலா 500 ரூபாய் என சுமார் 3 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து வட்டார கல்வி அலுவலகத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவறை கட்டுவதற்காக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஆசிரிய, ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., பைல் செய்ய வேண்டிய வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் தனி ஆடிட்டர் மூலம் டி.டி.எஸ் பைல் செய்வதாக கூறி ஆசிரியர்களிடம் 250 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆகியோருக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜஸ் என்பவர் ஊழியர்கள் மூலம் ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்தது தெரிய வந்தது. ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் நேரடியாக புகார் அளிக்காததால் பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் ஒருவர் பணத்தை கட்டாக வைத்து எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் நடந்து ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது வீடியோ வெளியாகி இருப்பது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.