Categories: தமிழகம்

தூய்மை பணியின் போது அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ஆட்சியர் : பெண் அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் : தூய்மைப் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்ட போது பெண் அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் எல்லிஸ் சத்திரம் சாலை ஓரமாக உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நீர்வழிப் போக்குவரத்து களான கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட விழுப்புரம் வட்டாட்சியர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சாலை ஓரமாக குப்பை கொட்டுதல் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மேற்கொள்பவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தி நீர் நிலை அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடர் காடுகளை வளர்த்திட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு அலுவலக பெண் அதிகாரி தேவியிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அடுக்கடுக்காக கேள்வி கேட்டதால் பெண் அதிகாரி படபடப்பாக காணப்பட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அந்த இடங்களை பார்வையிட்ட பின் அங்கிருந்து சென்றவுடன் பெண் அதிகாரி தேவி சாலையிலேயே மயங்கி விழுந்ததார்.

இதனைக்கண்ட அலுவலர்கள் மற்றும் துப்புரவுபப் பணியாளர்கள் தேவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த அழுத்தம் காரணமாக பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.