சென்னையில் 2ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் மற்றும் கொலை, கொள்ளை என குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போதை கலாச்சாரம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து சட்டவிரோத கும்பல் அரங்கேற்றம் செய்து வருகிறது.
எனவே, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை கஞ்சா 2.0 என்னும் திட்டத்தை செயல்படுத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மாணவர்களிடம் இருந்து போதைப் பொருள் புழக்கத்தை நீக்க முடியாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் படித்து வந்த பிகாம் இரண்டாம் ஆண்டு மாணவி ரூத்பிரின்சி போதை மாத்துரை உட்கொண்டு இறந்து விட்டதாக
அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அண்ணாநகர் மேற்கு சாலையில் உள்ள உதயம் காலனியைச் சேர்ந்தவர் சாம்யுவராஜ் என்பவரின் மகள் ரூத்பிரின்சி குயின் மேரிஸ் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 8ம் தேதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு, மீண்டும் மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த 9ம் தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 22ம் தேதி உயிரிழந்தார்.
சிகிச்சை பெறுவதற்கு முன்பாக, கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் இருந்து போதை மாத்திரை தனக்கு கிடைத்ததாகவும், அதனை சாப்பிட்ட பிறகே இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் மாணவி ரூத்பிரின்சி தெரிவித்துள்ளார்.
மாணவியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உள்ளுறுப்புகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தனது மகளின் இறப்பு குறித்து சாம்யுவராஜ் முதல்வர் தனி பிரிவு,
காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் புகார் ஒன்றை செய்துள்ளார். அதில், மாணவி ரூத்பிரின்சி போதை மாத்துரை உட்கொண்டு இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, என் கவனத்திற்கு வந்த உடனே துறை ரீதியாக அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கல்லூரியில்
போதை மாத்திரையை யாரும் பயன்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.