தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பொட்டானிக்கல் பூங்காவில் தாவரங்கள், பூக்கள் அதிக அளவில் பயிரிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்று அங்கு அவர்களை இயற்கை எழிலோடும், மலர்களோடும் பல வண்ண வகையில் புகைப்படங்களை மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இது நாள் வரை புகைப்படத்திற்கு 100 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 500 ரூபாய் வசூலிப்பதாகவும், வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு 500 ரூபாய் வாங்கி வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஒளிப்பதிவாளர்கள், புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொட்டானிக்கல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும் அதிக கட்டணம் வசூல் செய்வதாலும் மக்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோன்று கோவை வளாகுளத்தில் படகு சவாரி சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் துவங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மக்களின் பொழுதை போக்க குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இடங்கள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாநகரில் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி அதில் படகு சவாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அங்கு படகு சவாரி செய்ய கட்டணம் அதிகப்படியாக வசூலிப்பதாகவும், உணவு பொருட்கள் விற்பனையும் அதிக செலவு ஆகிறது என்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
பொதுமக்களில் மன அமைதியை உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பொது இடங்கள் தற்பொழுது அதிக கட்டணம் வசூலிக்கும் இடங்களாக மாறி வருவது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.