திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் இன்று மாலை பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது 100 மேற்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த போது இவர்கள் இருவரும் அவரைப் பாளையம் பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது.
இதில் லக்ஷ்மணன் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கார்த்தி இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வருகிறார். மேலும் இருவரும் சட்ட விரோதமாக போதை மாத்திரையை விற்பனைக்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து பல்லடம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி சென்ற 100 போதை மாத்திரை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பல்லடம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி சென்ற 100 போதை மாத்திரை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.