வேலூர் : வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில், திமுக சார்பில் கல்லூரி மாணவி தேர்தலில் களம் காணவுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காகிதப்பட்டறை 28-வது வார்டில், வடக்குப் பகுதி வட்ட செயலாளர் குமார் என்பவரின் மகள் மம்தா குமார்(22) தற்போது திமுக சார்பில் களம் இறங்கியுள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பொறியியல் படிப்பில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.
இளம் வயது வேட்பாளர் என்பதால் காகிதப்பட்டறை 28-வார்டில் இவர் தற்பொழுது பேசும் பொருளாய் வலம் வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரியில் படிக்கும் தமக்கு வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தான் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும், இந்த வார்டிர்க்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் கூறினார். என்னை நம்பி கொடுத்த இந்த பதவியை வெற்றி கனியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதங்களில் சமர்ப்பிப்பேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.