கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது இளைஞர் மற்றும் பள்ளி சிறுமி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படியுங்க: அவமானம்.. நிழல் முதலமைச்சர் சபரீசன் : CM குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி கொள்கை.. அண்ணாமலை காட்டம்!
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர்கள் இருந்த நிலையில் சம்பவத்தை சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கல்லூரி சிறுவன் சிறுமியின் ஊருக்குச் சென்று சிறுமியை அழைத்துக் கொண்டு அய்யர்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கல்லூரி மாணவன் அம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர்களுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்களும் அய்யர் மலைக்கு வந்துள்ளனர். வந்த பெற்றோர்கள் ஒரு வாடகை ஆம்னி வேனில் மகனையும் திருமணம் செய்த சிறுமியையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றுள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றபோது அக்காண்டி மேடு என்ற இடத்தில் சிறுமியின் உறவினர்கள் வந்து வேனை மறித்து ஆம்னி அடித்து நொறுக்கி வேனில் இருந்த மாணவனின் உறவினர்களை அடித்து உதைத்து சிறுமியை மீட்டு சென்றனர்.
சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வந்ததால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த கல்லூரி மாணவன் மற்றும் அவரது தம்பியை தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் காரை அடித்து சேதப்படுத்தி, மாணவன் மற்றும் அவரது தம்பியை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் உறவினர்கள் கழுகூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்ரமணி ( வயது 48) பிச்சைமுத்து மகன் சஞ்சய் (வயது 20) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.