கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை தடுக்கவேண்டும், இல்லையேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன் தமிழக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு மதுபான கூடங்களை திறக்க மேல்முறையீடு செய்ததை கண்டித்து கோவையில் டாஸ்மார்க ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பாக தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சம்மேளன மாநில பொதுசெயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களின் பணி இட மாறுதலுக்கு பெருமளவில் பணம் வசூலித்து வருகிறார். மேலும் அமைச்சரின் சிபாரிசில் உள்ளவர்களுக்கு மட்டுமே பணி இடமாற்றம் கிடைக்கிறது. மற்றவர்களிடம் பெருமளவில் பணம் வசூல் நடக்கிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் மதுகூடங்களை அடைக்க நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் தமிழக அரசு நேல்முறையீடு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு ஆளும் கட்சியினர் கமிசன் கேட்டு மிரட்டுகின்றனர். கொரோனா காலத்தில் நோய்தடுப்பு நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்கான செலவுகளை அரசு தராமல் ஏமாற்றி வருகிறது.
மேலும் டாஸ்மாக் கடை நஷ்டத்தில் இயங்குவதாக பொய்யான ஒருதகவலை அரசு அளித்திருப்பதுடன், 1361 கோடி கடனில் டாஸ்மாக் கடனில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் திமுகவினரின் தலையீட்டை தடுக்க வேண்டும், வேலை நேரம் முடிந்த பிறகு, மதுபான கூடங்களை டெண்டர் எடுத்தவர்கள் பெட்டி,பெட்டியாக மதுபானம் கேட்டு மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.