சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், “எனக்கு 18 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நான் வீட்டு வேலை செய்கிறேன்.
தற்போது என்னுடைய மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என் மகனைக் கடைக்கு அனுப்புவது வழக்கம். சம்பவத்தன்றும் என்னுடைய மகன், பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், என்னுடைய மகனை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பின்னர், எனது மகனிடம் அவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதனால் அழுதுகொண்டே என் மகன் வீட்டுக்கு வந்து, என் மகளிடம் விவரத்தைக் கூறியுள்ளான். என் மகள் மூலம் இந்தத் தகவல் எனக்குத் தெரியவந்தது. எனவே, எனது மகனிடம் தவறாக நடந்து கொண்ட அந்த ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் ஆளுநரைச் சந்தித்ததில் இவ்வளவு அரசியலா? தவெகவின் இந்த பாய்ச்சல் எப்படி?
இதன் பேரில், புளியந்தோப்பு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அப்போது அவர் மது போதையில் இருந்ததால் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. பின்னர், போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப் போவதாக புளியந்தோப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.