தமிழகம்

வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்?

பொதுவாக வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களால் சில நேரங்களில் மிகப் பெரிய சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவது உண்டு. 

அது மட்டுமல்லாது விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுமே விபத்தில் சிக்குவது உண்டு. உதாரணத்திற்கு தலைக்கவசம் அணியாமல் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் பலர் உண்டு. 

குறிப்பாக சென்னை நகரை நாம் தனியாக கூறத்தேவையில்லை. பல வாகன ஓட்டிகளால் அன்றாடம் பல விதிகள் மீறப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் அதிகம் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் பல சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பது உண்டு. 

ஆனால் விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது தொந்தரவாக உள்ளதாக பல பேச்சுக்கள் அடிபட்டன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவலர்கள் கும்பல் கும்பலாக சாலைகளில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி கட்டாய அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இனி 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே கட்டாய அபராதம் என்று கூறியுள்ளார்.

அதாவது, 

தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்

தவறான திசையில் (Wrong Side) பயணித்தல்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்

ஒரே வாகனத்தில் டிரிபிள்ஸ் (3 பேர்) செல்வது

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

ஆகிய 5 வித விதிமீறல்களுக்கு மட்டுமே இனி கட்டாய அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.