தமிழகம்

வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்?

பொதுவாக வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களால் சில நேரங்களில் மிகப் பெரிய சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவது உண்டு. 

அது மட்டுமல்லாது விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுமே விபத்தில் சிக்குவது உண்டு. உதாரணத்திற்கு தலைக்கவசம் அணியாமல் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் பலர் உண்டு. 

குறிப்பாக சென்னை நகரை நாம் தனியாக கூறத்தேவையில்லை. பல வாகன ஓட்டிகளால் அன்றாடம் பல விதிகள் மீறப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் அதிகம் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் பல சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பது உண்டு. 

ஆனால் விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது தொந்தரவாக உள்ளதாக பல பேச்சுக்கள் அடிபட்டன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவலர்கள் கும்பல் கும்பலாக சாலைகளில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி கட்டாய அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இனி 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே கட்டாய அபராதம் என்று கூறியுள்ளார்.

அதாவது, 

தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்

தவறான திசையில் (Wrong Side) பயணித்தல்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்

ஒரே வாகனத்தில் டிரிபிள்ஸ் (3 பேர்) செல்வது

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

ஆகிய 5 வித விதிமீறல்களுக்கு மட்டுமே இனி கட்டாய அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

Arun Prasad

Recent Posts

முதலமைச்சர் டெல்லி செல்வது ஏன்? எல்லாமே அதுக்காகத்தான்.. பரபரப்பை கிளப்பிய வானதி சீனிவாசன்!

ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்த பாரதிய…

3 hours ago

திரிஷாவுக்கு ஜோடி கமலா? சிம்புவா? பலரின் சந்தேகத்தை கிளியர் செய்த தக் லைஃப் படக்குழு?

எகிறும் எதிர்பார்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

3 hours ago

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலில் வந்த குறியீடு!!

கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்…

4 hours ago

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இந்த நடிகர்கள்தான்? ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள்!

அமலாக்கத்துறை ரெய்டு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது Dawn Pictures என்ற நிறுவனத்தின் மூலம் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின்…

5 hours ago

“தம்பி” அடித்த கொள்ளையில் உங்க குடும்பத்திற்கும் பங்கு இருக்கோ? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி டெல்லி செல்கிறார். இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

5 hours ago

ஒவ்வொரு மாதமும் 40 லட்சம் வேணும்! நீதிமன்ற படி ஏறிய ஆர்த்தி?

ஆர்த்தி-ரவி மோகன் பிரிவு ரவி மோகனும் ஆர்த்தியும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.…

6 hours ago

This website uses cookies.