தமிழகம்

வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்?

பொதுவாக வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களால் சில நேரங்களில் மிகப் பெரிய சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவது உண்டு. 

அது மட்டுமல்லாது விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுமே விபத்தில் சிக்குவது உண்டு. உதாரணத்திற்கு தலைக்கவசம் அணியாமல் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் பலர் உண்டு. 

குறிப்பாக சென்னை நகரை நாம் தனியாக கூறத்தேவையில்லை. பல வாகன ஓட்டிகளால் அன்றாடம் பல விதிகள் மீறப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் அதிகம் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் பல சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பது உண்டு. 

ஆனால் விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது தொந்தரவாக உள்ளதாக பல பேச்சுக்கள் அடிபட்டன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவலர்கள் கும்பல் கும்பலாக சாலைகளில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி கட்டாய அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இனி 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே கட்டாய அபராதம் என்று கூறியுள்ளார்.

அதாவது, 

தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்

தவறான திசையில் (Wrong Side) பயணித்தல்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்

ஒரே வாகனத்தில் டிரிபிள்ஸ் (3 பேர்) செல்வது

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

ஆகிய 5 வித விதிமீறல்களுக்கு மட்டுமே இனி கட்டாய அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

Arun Prasad

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

23 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

23 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

24 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

1 day ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

1 day ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

1 day ago

This website uses cookies.