Categories: தமிழகம்

நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா.? வெட்டி பாத்துக்குவோம் வா : இளைஞர்களிடையே மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை : முன்விரோதம் காரணமாக கோவையில் வாலிபர்கள் அரிவாள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த காட்சன் என்ற வாலிபரை முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் புள்ளி பிரவீன், கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கோபி, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பது தெரிய வந்தது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கண்ணப்பநகர் பகுதியில் யார் ‘டான்’ என்பதில் இரண்டு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த சூழலில் காட்சனை கொலை செய்ய முற்பட்டதாகவும் அதற்குள் மக்கள் கூடியதால் விரைவாக அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளனர்.

தொடந்து பிடிபட்ட 4 பேரையும் கைது செய்த ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூழலில் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிப்பதற்கான பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் வாலிபர் காட்சனை கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.