Categories: தமிழகம்

நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா.? வெட்டி பாத்துக்குவோம் வா : இளைஞர்களிடையே மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை : முன்விரோதம் காரணமாக கோவையில் வாலிபர்கள் அரிவாள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த காட்சன் என்ற வாலிபரை முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் புள்ளி பிரவீன், கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கோபி, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பது தெரிய வந்தது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கண்ணப்பநகர் பகுதியில் யார் ‘டான்’ என்பதில் இரண்டு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த சூழலில் காட்சனை கொலை செய்ய முற்பட்டதாகவும் அதற்குள் மக்கள் கூடியதால் விரைவாக அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளனர்.

தொடந்து பிடிபட்ட 4 பேரையும் கைது செய்த ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூழலில் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிப்பதற்கான பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் வாலிபர் காட்சனை கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

15 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

15 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

15 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

16 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

16 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

17 hours ago

This website uses cookies.