Categories: தமிழகம்

சுயேட்சை கவுன்சிலர் ஒருபக்கம்…திமுக-காங்கிரஸ் கவுன்சிலர்கள் மறுபக்கம்: சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது…சேலத்தில் பரபரப்பு..!!

சேலம்: சாலைகள் அமைக்கும் பணியின் போது சுயேட்சை கவுன்சிலரும், திமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி 31வது கோட்டம் கோட்டை பகுதியில் உள்ள நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி முறையாக சாலை அமைக்கவில்லை எனக்கூறி சுயேட்சை கவுன்சிலர் சையத் மூசா என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். அதில், சாலை அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒப்பந்தாரருக்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும் சுயேட்சை கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால், நிறுத்திய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சுயேட்சை கவுன்சிலரை கண்டித்தும் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சையத் மூசாவின் ஆதரவாளர்களும் அந்த பகுதியில் திரண்டதால் இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் முற்றியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றாமல், அவசர கதியில் தரமற்ற சாலைகள் போடும் பணியை தொடர விடமாட்டோம் என சையத் மூசா தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.