தமிழகம்

திருப்பதி கூட்ட நெரிசலில் என் மனைவி எப்படி இறந்தார் தெரியுமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மறுக்கும் உறவினர்கள்!

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி பலர் மிதித்ததில் தனது மனைவி உயிரிழந்ததாக கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள திருமலையில் இருக்கும் ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் (TTD) அறிவித்திருந்தது.

இதற்காக பல்வேறு இடங்களில் என மொத்தம் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி, டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டைப் பெற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேநேரம், அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இதில், சேலம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த இரு பெண்களும் உயிரிழந்தனர். மேலும், சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!

இந்த நிலையில், உடல்நலக் கோளாறால் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் மிதித்ததில் உயிரிழந்ததாக அவர் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், இரவு 07.30 மணிக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய எனது மனைவியைக் காணவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு சென்ற பார்த்தபோதுதான் தன்னுடைய மனைவி உயிரிழந்த விவரம் தனக்கு தெரிய வந்ததாகவும் ஆந்திராவைச் சேர்ந்த நபர் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

5 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

6 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

6 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

6 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

6 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

7 hours ago

This website uses cookies.