தமிழகம்

பொன்முடி மேல ஒரு கண்ணு போல.. திமுகவை கடுமையாக சாடிய காங்கிரஸ் நிர்வாகி!

மயிலாடுதுறையில், அமைச்சர் பொன்முடியை அலறவிட்டவன் என காங்கிரஸ் மேலிட நிர்வாகி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், அமைச்சர் பொன்முடியையே நான் அலறவிட்டவன் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய குலாம் நபி, “கட்சியில் பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, நம்மை நாம் வளர்த்துக் கொள்ள முடியும், நீங்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஏன் எடுத்ததும் திமுக மாவட்டச் செயலாளரிடம் செல்கிறீர்கள்? முதலில் ஒன்றியம், கிளை அளவில் உள்ளவர்களிடம் நன்றாக இருங்கள்.

அவர்கள் (திமுக) இப்போது தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என நியமித்து இருப்பார்கள். அதனைப் போல் நாமும் நிர்வாகிகளை நியமித்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுகவினர் கட்சியை கட்டமைப்புடன் நிர்வாகிகளைக் கொண்டு நியமித்து, நம்மை பலவீனப்படுத்திவிட்டனர்.

நீங்கள் உங்களுக்குத் தேவையானதை காங்கிரஸ் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என எல்லாரிடமும் கேட்டுப் போராடி பெறுங்கள். இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும், பொன்முடியையே நான் அலறவிடுவேன், இப்போதும் போராடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், அவர் என் நண்பர் தான், பேராசிரியர் தான்” என்றார்.

இதையும் படிங்க: 4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நகர்வுகள் தமிழகத்தில் சற்று வித்தியாசத்தை உணர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில், இவ்வாறு திமுகவினரையும், திமுக கட்சிக் கட்டமைப்பையும் இவ்வாறு கூறி வருவது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.