தமிழகம்

திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் படுகொலை.. சிசிடிவியில் சிக்கிய தடயம்?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே. பேட்டை வட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நெசவு தொழிலாளி இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.

இவரது மனைவி சிவகாமி. மகன்கள் கணபதி, பார்த்திபன், ராஜசேகர், ஆகியோர்கள் வசித்து வருகின்றனர். இவர் வீட்டில் இரவும் அனைவரும் உறங்கி விட்ட பின்பு வீட்டில் உள்ள நெசவுத்தூள் எந்திரங்கள் மூலம் இரவு முழுவதும் நெசவு வேலை பார்த்து வந்துள்ளார்

இவர் காலையில் வீட்டில் இல்லை என்று இவரது மனைவி சிவகாமி தேடி உள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் பார்த்தால் ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் வெளியேறி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.,

இவரது மனைவி அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆர்.கே. பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடயே உறவினர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இறந்து போன ராஜேந்திரன் வீட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் கஞ்சா பழக்கம் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.

மேலும் வெளியூரை சேர்ந்த இளைஞர்களும் இந்த பகுதியும் பள்ளியின் பின்புறம் வருகிறார்கள். ராஜேந்திரன் வீடு பின்புறமும் இங்கே உள்ளதால், ராஜேந்திரன் அவப்பொழுது இதனை தட்டி கேட்டு கஞ்சா போதை இளைஞர்கள் தான் இந்த படுகொலை காரணம் என்றும் மேலும் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அதிக இரும்புகள் கம்பிகள் உள்ளது.

இதனை திருடுவதற்காக வந்த திருடர்கள் கூட ராஜேந்திரனை கொலை செய்திருக்கலாம் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

போலீசார் கஞ்சா பழக்கத்தை இந்த பகுதியில் விற்பனையை கட்டுப்படுத்த முன் வர வேண்டும் மாணவர்கள் அதிகம் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று பொதுமக்கள் ராஜேந்திரன் உறவினர்கள் பகிரங்க குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை இந்த பகுதியில் செயல்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.