கரூரில் கூட்டுறவுத்துறை வார விழாவையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், பொதுமக்கள் எழுந்து சென்றதால், காலியான சேர்களின் முன்பு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உரையாற்றி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் கூட்டுறவு துறை 70ஆம் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயம், அரசு நலத்திட்ட உதவி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிகள் குறைந்த அளவு இருந்த காரணத்தினால் பலர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களை அழைத்து வந்தனர்.
அப்போது, அவர்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டுறவு துறை திட்டங்கள் குறித்து பேச தொடங்கினார்கள். அவர்களின் பேச்சை கேட்க மறுத்த பொதுமக்கள், இருக்கையை விட்டு வெளியே சென்றதால், இருக்கைகளில் பலர் இல்லாமல் வெறும் இருக்கை முன்பு எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேசினர்.
மேலும், சிலர் டீ குடிக்க செல்வதாக கூறி விட்டு, பலர் சொந்த ஊருக்கு வேன்களில் ஏறி வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலியான இருக்கைகள் முன்பு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.