கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் கூறியதாவது :- அயோத்தி ராமர் கோயிலில் கூடிய கூட்டத்தை விட, தை பூசத்திற்கு பழநியில் அதிக கூட்டம் கூடும். இது வட மாநிலத்தவர்களுக்கு தெரியாது. தமிழகத்தையும், தமிழக அரசியலையும் புரிந்து கொள்ளாதவர்கள், அயோத்தி ராமர் கோயிலால் தமிழகத்தில் பலன் கிடைக்கும் என அரசியல் கணக்கு போடுகின்றனர்.
வட இந்தியர்களுக்கு தேவையானவற்றை பாஜக செய்கிறது. ஆதலால் வட இந்தியாவில் பாஜகவிற்கு அதரவு பெற்றுள்ளது. தமிழகத்தை விட சிறப்பான கோவில்கள் வடநாட்டில் இல்லை. உலகத்திலேயே அதிக கோயில் உள்ளது. தமிழகத்தில் தான். தமிழக கோயில்களை பிரபலப்படுத்தி, அதன் மூலம் கோயில் சுற்றுலா வளர்ச்சி அடைவதை வரவேற்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடைபெறுவதால் அதற்கு உரிய சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்.
திமுக மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை இளைஞர் அணி மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும். இலங்கை இந்தியா கடல் வழி பாதை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இலங்கை கடற்படையால்,தமிழக மீனவர் சிறை பிடிப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசு 10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை.
காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எனக்கு எந்த ஒரு நோட்டீஸும் அனுப்பவில்லை. கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது வருத்தமளிக்கிறது. இது போன்ற அதிகாரிகள் காவல்துறையில் இருக்கக் கூடாது. இந்திய அளவில் தமிழக காவல் நிலையத்தில் தான் அதிக சித்தரவதைகள் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசு குறைக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.