Categories: தமிழகம்

அதிமுகவைப் போல காங்கிரசையும் யாராலும் அழிக்க முடியாது… அதிமுக எங்களின் எதிரி கட்சி அல்ல ; காங்., எம்பி திருநாவுக்கரசர் !!

தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும், அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அழிந்தா போய்விட்டது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு பழ வகைகள் சர்பத் நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதன்பினர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது :- நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் தரக்கூடியது. அவர் உடல் எரிக்கப்பட்ட விதத்தை வைத்து சந்தேகத்திற்கு உரிய மரணம் என்று கூறி வருகின்றனர். இது போல் சம்பவம் யாருக்கும் நடந்தாலும் கண்டனத்திற்கு உரியது.

காவல்துறை விசாரனை நடத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பொறுப்பு எல்லோருக்கும் இருக்கு, போலீசார் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, சிபிஐ விசாரணை கேட்டால் காவல்துறை மேல் நம்பிக்கை இல்லாமல் போயிடும். இப்போதைக்கு யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்படுவர்கள் தான், நிரூபிக்கப்பட்ட பின் தான் அவர்கள் குற்றவாளி.

காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் நடுநிலைமையாக செயல்படும். உரிய விசாரணைக்கு பின் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஏதும் சொல்ல முடியாது.

இந்த வழக்கை ராமஜெயம் கொலை வழக்கை போல் கிடப்பில் போட்டு விடாமல், காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். கர்நாடகாவில் தேவகவுடா மகன் மற்றும் பேரன் ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கைது சம்பவம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை மிகவும் தலைகுனிய வைத்துள்ளது.

மேலும் படிக்க: அறிவிக்கப்படாத மின்வெட்டு… தோல்வியடைந்த தமிழக அரசு ; கொந்தளிக்கும் ராமதாஸ்!!

இதனை நிரூபித்து குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எந்த கட்சியையும் யாரும் அழித்துவிட முடியாது. தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலயும் முடியாது. அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் அழிந்தா போய்விட்டது.

பிரதமர் மோடி தன்னுடைய பிரதமர் பதவியை மறந்துவிட்டு தரம் தாழ்ந்து பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது கண்ணனுக்கு உரியது, இரண்டு கட்ட தேர்தல் முடிவிலேயே இது போன்று அவர் பேசுகிறார். இதிலிருந்து தேர்தல் முடிவு என்ன என்பதை அவர் அறிந்து விட்டார். அடுத்த கட்ட தேர்தலிலும் இன்னும் மோசமாக இஸ்லாமியரைப் பற்றி பிரதமர் பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

நான் திருச்சி தொகுதியில் 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றேன். தினசரி நாளிதழ் எடுத்த சர்வேயில் 39 எம்பிக்களில் சிறந்த எம்பியாக செயல்பட்டதாக எனக்கு முதலிடம் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் எனக்கு சீட் கொடுக்காதது வருத்தமாகத்தான் உள்ளது. எனக்கு மட்டுமல்ல கூட்டணி கட்சியினரும், அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் வருத்தப்பட்டுள்ளனர்,

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட எனக்கு சீட் கிடைக்காததால் வருத்தப்பட்டு பேசியதாக சொன்னார்கள். சொந்த மாவட்டம் என்பதால் அவர் பேசி இருப்பார், அதிமுக எங்களுக்கு எதிர்கட்சி தான். எதிரிகட்சி அல்ல, அந்த வகையில் எனக்காக கட்சி பாகுபாடு இன்று பலரும் வருத்தப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது தான் நான் காங்கிரஸில் சேர்ந்தேன்.

எந்த ஒரு பொறுப்பும் கேட்டு கட்சியில் சேரவில்லை, கட்சியில் சேர்ந்து ஆறாண்டு காலம் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் கட்சி பணி செய்தேன். அதற்கு பிறகு தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கிடைத்தது. அதற்குப் பிறகு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளித்தார்கள். தேர்தல் நின்று வெற்றியடைந்தேன். ஆனால், தற்போது அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் காங்கிரஸில் சேரும்போது எனக்கு இந்த பதவி தான் வேண்டும் என்று கண்டிஷன் போட்டு சேரவில்லை.

அதனால் எனக்கு எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ, அதனை கடவுள் கொடுப்பார். கடவுள் கொடுக்க நினைப்பதை மனிதர்களால் தடுக்க முடியாது. கடவுள் கொடுக்க நினைக்காததை மனிதர்களால் கொடுக்க முடியாது. கடவுள் கொடுக்க நினைப்பதை மனிதர்கள் தடுக்க முடியாது. இது கடவுளுக்கே தான் சொல்கிறேன், எது தர்மம் எது நியாயமோ அதுதான் வெல்லும். கடவுள் மீது நம்பிக்கை உள்ளவன் நான். அதேபோல் மக்கள் மீதும் நம்பிக்கை உள்ளவன் நான். பொறுப்பில் இருந்தாலும், இல்லை என்றாலும் நான் மக்கள் பணியாற்றுவேன், எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

11 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

12 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

13 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

14 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

14 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

15 hours ago

This website uses cookies.