ராகுல் காந்தியின் 2ம் கட்ட நடைப்பயணம் I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான காமராஜர் அரங்கில் பொங்கல் விழா, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் ஆகிய ரெக்ஸ் தலைமையில்
நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய 2ம் கட்ட நடை பயணத்தை வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்க உள்ளார். அவரின் முதல் பயணம் இமாலய வெற்றி பெற்றது போல, இரண்டாவது பயணமும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். மேலும் I.N.D.I.A. கூட்டணிக்கு வலு சேர்க்கும், காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்த நடைபயணம் எளிதாக்கும். அந்த நடைபயணம் வெற்றி பெற தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 பேரை விடுதலை செய்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தான். அவர்களின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விமான நிலைய திறப்பு விழா முழுமையாக அரசு விழாவாக நடைபெறவில்லை. அந்த விழாவில் அரசியல் கலப்பு இருந்தது. அதனால் தான் அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, என தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.