திருப்பூர் : இரு சக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நல்ல பாம்பை லாவகமாக மீட்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூர் – வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன். இவர் பள்ளி வளாகத்தில் தனது
இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.
பின்னர் வேலை முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க முயற்சித்த போது வாகனத்தின் முன்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இரு சக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை நீண்ட நேரமாக போராடி லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பால் பள்ளி வளாகத்தில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று விட்ட காரணத்தால் விபரீதம் எதுவும் ஏற்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.